பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்க புதிய திட்டம்: மாசு பாதிப்பை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

நகர்ப்புறங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது உரு வாகும் காற்று மாசுவால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் மக்கள் பட்டாசு வெடிப் பதை ஊக்குவிக்க மாசு கட்டுப் பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் அன்றாடம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகளில் இருந்து வெளி யேறும் புகை, சாலையை முறையாக பராமரிக்காதது போன்ற வற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் ஆனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது, மேற்கூறிய முறை களில் ஏற்படும் காற்று மாசின் அளவை விட அதிகமாக உள் ளது. பட்டாசு புகையானது அபாய கரமான பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் அடங்கியதாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி அன்று சென்னை சவுக்கார் பேட்டையில் காற்று மாசின் அளவு 777 மைக்ரோ கிராமாக இருந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்