தமிழர்கள், இப்போது சாதிரீதியாக பிரிந்து கிடக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மணி வா.மு.சே. திருவள்ளுவர் மணி விழா அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், கீழடி நாகரீகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என கணித்து இருப்பதன் மூலம் தமிழ் சமூகத்தில் சாதி, மதம் எதுவும் இல்லை என்பது தெரிய வருவதாக கூறினார். சிந்து சமவெளி நாகரீகமும் கீழடி நாகரீகமும் ஒன்று என்று கூறிய திருமாவளவன், சாதியற்ற சமூகமாக இருந்த தமிழர்கள், இப்போது சாதிரீதியாக பிரிந்து கிடப்பதாக கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்