ரயில் நிலையத்தில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி!

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகள் உரிய பராமரிப்பின்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது. அண்மையில் திறக்கப்பட்ட புதிய கழிவறைகளும் பூட்டப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் உரிய கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)