ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு!

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால் இந்த தடை உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிடவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டதுடன், அவ்வாறு விற்பது தண்டனைக்குரியது, என விளம்பரப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!