65 ஆண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடாமல் இருக்கும் கிராமம்

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராம மக்கள், 65 ஆண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ஏரியூரை அடுத்துள்ள எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 13 கிராம மக்கள், 1954 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது இல்லை. இந்த ஊரில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் புத்தாடைகள் வாங்குவதும் இல்லை. பட்டாசுகள் வாங்குவதும் இல்லை. 65 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் தீபாவளியைக் கொண்டாடக் கடன் வாங்கி, அதன்மூலம் தீபாவளி கொண்டாடி விவசாயத்தைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தீபவாளியைக் கொண்டாடாமல், பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!