திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின்

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக வன்னியர் சமுதாய மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களைத் தீட்டியதோடு அவர்கள் கல்வியில் முன்னேற பாடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சமூக மக்கள் நடத்திய போராட்டங்களை அதிமுக எள்ளி நகையாடியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில், வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக செய்த சாதனைகளை பட்டியல் இட முடியுமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமி-க்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்