வரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை...!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். ➤குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். வரும் 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். ➤அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை அளவில், 8 சென்டி மீட்டர் கிடைத்துவிட்டதாகவும் புவியரசன் கூறினார். ➤காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்