தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி...!

சென்னையில் தனியார் நிறுவனம் மூலம் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு பகுதியில் ரஞ்சித் மற்றும் மனோஜ் ஆகியோர் ஓம் சக்தி எண்டர் பிரைசஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் தீபாவளி சீட்டு நடத்துவதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கடந்த ஓராண்டாக மாதந்தோறும் 500 ரூபாய் வசூல் செய்துள்ளனர். சுமார் ஆயிரத்து 500 பேரிடம் சீட்டு வசூல் செய்த அவர்கள் சுமார் 2 கோடி ரூபாய் பணத்துடன் திடீரென மாயமாகியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த 100க்கும் மேற்பட்டோர் திருவேற்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் புகார் அளித்தனர். பணம் கட்டியது குறித்து கேட்கப்போனால் தங்களை மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் விரைந்து மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)