விஸ்வரூபம் எடுக்கும் காரைக்குடி சிப்காட் பிரச்சினை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு சிக்கல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிப்காட் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ல் சட்டப்பேரவையில் 110 விதியில் காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த சமயத்தில் சிவகங்கை ஆட்சியராக இருந்த ராஜாராமனும் 'காரைக்குடியில் சிப்காட் அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து 2015-ல் அரசாணை வெளியிடப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க காரைக்குடி அருகே கழனிவாசலில் 90.43 ஏக்கர், திருவேலங்குடியில் 1,162.81 ஏக்கர் என, 1,126.15 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக 4 அலகுகள் ஏற்படுத்தப்பட்டு 4 வட்டாட்சியர்கள் தலைமையில் 18 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிப்காட் திட்டத்திற்கு சிலர் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தனர். இந்நிலையில் 2017-ல் சிப்காட் நிர்வாகம் காரைக்குடி சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அரசுக்கு பரிந்துரை செய்தது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்த தொடங்கப்பட்ட 4 அலகுகளில் மூன்று அலகுகள் 2018 பிப்.21-ல் மூடப்பட்டன. கோப்புகளை மட்டும் பராமரிக்க ஒரே ஒரு அலகு மட்டும் வட்டாட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்