பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கி டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி: மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும். இந்த முடிவை பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகத்துக்கும் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் போது 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ந்தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)