ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டியிருந்த சிபிஐ, அவரை காவலில் எடுத்து விசாரித்தது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன அதிபர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என தெரிகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்