கடையம் அருகே 13 வயது சிறுமி யோகாவில் உலக அளவில் சாதனைகள் படைத்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே 13 வயது சிறுமி யோகாவில் உலக அளவில் சாதனைகள் படைத்து வருகிறார். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அந்த மாணவி பல்வேறு விருதுகள், பரிசுகள் வாங்கி குவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் கடையம் அடுத்துள்ள ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முகம்மது நஸிருத்தீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மூத்த மகள் 13 வயதுடைய மிஸ்பா நூருல் ஹபிபா. இவர் தென்னகத்தின் ஸ்பா என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் செய்யது ஹில் வியூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படித்தார். இவருக்கு 2ம் வகுப்பிலிருந்தே யோகாவில் அதீத பிரியம். இவருக்கு குற்றாலம் குடியிருப்பை சேர்ந்த யோகா ஆசிரியர் குரு கண்ணன் பயிற்சி அளித்து வருகிறார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்