பிரதமர் மோடி-அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. இதனை மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இதன் ஒரு நிகழ்வாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க உள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெண்ணை உருண்டை கல், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு குறித்து அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாமல்லபுர சிற்பங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வெளியே நின்ற படி செல்ஃபி எடுத்து சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்