ஜாகிர் நாயக்கை கைது செய்து ஒப்படைக்க வேண்டும்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவுடன் ரஷ்யாவில் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வரும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை கைது செய்து ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் ஜாகிர் நாயக். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய நாடுகள் மாநாட்டில் மலேசியப் பிரதமரை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, ஜாகிர் நாயக் பிரச்சினையை எழுப்பியதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மோடியின் கோரிக்கைக்கு மலேசிய பிரதமர் உத்தரவாதம் ஏதும் அளித்தாரா என்ற தகவல் இல்லை. இப்பிரச்சினை குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று முடிவாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்