முதியவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவமனை

நாமக்கல் அருகே, அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்த முதியவரை, உறவினர்கள் யாரும் உடன் வராததைக் சுட்டிக்காட்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது. இரக்கியாம்பாளயத்தை சேர்ந்த ராமசாமி எனும் முதியவர் உறவினர்கள் யாருமின்றி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்ததால் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டில் பிரச்சனை உள்ளதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும், உறவினர்கள் யாரையாவது அழைத்துவரும்படியும் கூறியுள்ளனர். இதனிடையே 4 நாட்களாகியும் யாரும் வராததால், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, துப்புரவு பணியாளரான மாலதி என்பவர், சக்கர நாற்காலியில் அமரவைத்து அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அன்புமணி எனும் நபர், அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று நடந்த விஷயத்தை தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், முதியவர் ராமசாமியை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும், அவருக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே, சிகிச்சை அளிக்காமல் முதியவரை வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்