விருகம்பாக்கத்தில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை விருகம்பாக்கம் விநாயகம் தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவர் நர்ஸ் விஜயலட்சுமி(19). இவர் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கவனித்துவந்தார். இந்த நிலையில், விஜயலட்சுமி தங்கியிருந்த விடுதியின் அறை இன்று நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் விடுதியின் பொறுப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். கதவை நீண்ட நேரமாகத் தட்டியும் விஜயலட்சுமி திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது விஜயலட்சுமி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விஜயலட்சுமி தற்கொலை குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. விஜயலட்சுமி மரணம் குறித்து அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயலட்சுமியின் காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அப்போது இவர்களின் காதலுக்கு சாதி தடையாக இருந்ததால் காதலில் தோல்வியடைந்த விஜயலட்சுமி மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்