மொஹரம் தினத்தை ஒட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் விபத்து

ஆந்திரம் மாநிலம் கர்னூல் அருகே மொஹரம் தினத்தையொட்டி நடைபெற்ற தீமிதியின் போது, கட்டிடம் ஒன்றின் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்ததில் அதன் மீது நின்றுகொண்டிருந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் அடுத்த பீர்லா கிராமத்தில் திங்கட்கிழமை இரவு மொகரத்தை முன்னிட்டு தீமிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை ஏராளமானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த கட்டிடத்தின் மேல் ஏறி நின்றும் தீமிதியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. அதன் மீது நின்றிருந்தவர்கள் கூட்டமாக நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன் நிலையில், இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்