சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இலவசமாக நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 176 சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான அறிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலும், மனித நேய பயிற்சி நிறுவனமும் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பேராசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதற்காக பார்கவுன்சில் தனி செல்போன் செயலியை உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்