மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் காவலர்களுக்கு இரு மடங்கு அபராதம்

புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் காவலர்களிடம் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு உட்பட்ட பல்வேறு மாநிலங்களில், செப்டம்பர் மாதம் துவக்கம் முதலாக புதிய மோட்டார் வாகன சட்ட விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், டெல்லி போக்குவரத்து காவல்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றினை அதற்கு உட்பட்ட பல்வேறு பிரிவு தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் யாரேனும், போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்களிடம் இருந்து இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும், இந்த உத்தரவை ஒவ்வொரு பிரிவு தலைவர்களும், அவர்கள் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு அறிவித்து அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்