ப.சிதம்பரம்திகார் சிறையில்என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை இச்செய்தித் தொகுப்பு விளக்குகிறது ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திகார் சிறைக்கு கொண்டு செய்யப்பட்டார் . வரும் 16ம் தேதி 74வது பிறந்தநாளன்றும் ப.சிதம்பரம் சிறையில்தான் இருப்பார். திகார் சிறையில் அறைஎண் 7 அவருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு தனி அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டில் மின்விசிறி கழிவறை வசதிகள் அந்த அறையில் உள்ளன. இரவு உணவாக சப்பாத்தியும் தாலும் காய்கறியுடன் தரப்பட்டது. காலை 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவு வழங்கப்படுவதும் வழக்கம். மற்ற கைதிகளைப் போல் ப.சிதம்பரமும் தினமும் ஒன்றரை மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்கப்படுவார். அவருக்கு சிறைக்குள்ளும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடி அணியவும் மருந்துகளை உட்கொள்ளவும் தடையில்லை. திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்படும் போது செய்தியாளர்கள் ப.சிதம்பரத்தை சூழ்ந்துக் கொண்டனர். எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றித்தான் தமக்கு கவலை என்று கூறினார் ப.சிதம்பரம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்