தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்- பெண்கள் உட்பட 50 பேர் கைது

திண்டுக்கல் அருகே தடையை மீறி விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். விநாயகர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள் மட்டுமின்றி வீதிகள்தோறும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும், பொங்கல் வைத்தும் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்தனர். இதனையடுத்து, விநாயகர் சிலையை கரைக்க செய்ய தடையை மீறி பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக எடுத்துச் செல்ல இந்து முன்னணி அமைப்பினர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்ததுடன், எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசாரே அருகே உள்ள கோட்டைக்குளத்தில் கரைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து குடைப்பாறைப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்