CBI அதிகாரிக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க பேரம்

வழக்கு ஒன்றில் சி.பி.ஐ. அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசிய உள்துறை அமைச்சக அதிகாரி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் பிரிவு அதிகாரி பொறுப்பில் இருப்பவர் தீரஜ் குமார் சிங். இவர், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்புடைய வழக்கில் செல்வாக்கைச் செலுத்த முயன்றதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கின் விசாரணை அதிகாரியை தீரஜ் குமார் சிங் தொடர்பு கொண்டதாகவும், வழக்கிற்கு குறுக்கு வழியில் தீர்வு காண 2 கோடி ரூபாய் பேரம் பேசியதகவும் அவர்கள் கூறினர். ஆனால் தொடர்புடைய விசாரணை அதிகாரி நேர்மையுடன் இந்த விவகாரத்தை தனது மேலதிகாரிகளிடம் எடுத்துச் சென்றதையடுத்து தீரஜ் குமார் சிங்கை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி விசாரணை அதிகாரியிடம் முதல் தவணையாக 16 லட்சம் ரூபாயை கொடுக்க வந்த தீரஜ் குமாரை அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்