மதராசப்பட்டினம் விருந்து - பாரம்பரிய உணவுத் திருவிழா

தொற்றா நோய்கள் வராமல் இருக்க, பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். உணவு பாதுகாப்பு துறை மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இணைந்து நடத்தும் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழா வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. உணவுத் திருவிழாவுக்கான லோகோவை தீவுத்திடலில் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். பாரம்பரிய உணவுகள் செய்முறை மற்றும் அவற்றால் ஏற்படும் நலன்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்பட இருப்பதாகக் கூறினார். சாலை ஓரக் கடைகள் தொடங்கி பெரிய உணவு நிறுவனங்கள் வரை இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பாரம்பரிய உணவுகளை தயாரிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்