விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத நிறுவனம் மீது தாக்குதல்

திருப்பூரில், விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத பின்னலாடை நிறுவனத்தின் மீதும், அதன் ஊழியர்கள் மீதும் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்கேரிபாளையம் சாலையில் பின்னலாடை நிறுவனம் நடத்திவரும் சுரேஷ் என்பவரிடம், சில தினங்களுக்கு முன்னர் இந்து முன்னணியினர் சிலர் நன்கொடையாக பத்தாயிரம் கேட்டதாகவும், அதற்கு சுரேஷ் பணம் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு ஊர்வலத்தின்போது, இந்து முன்னணியினர் சிலர் அத்துமீறி சுரேஷின் பின்னாலாடை நிறுவனத்தில் புகுந்து காவலாளியை தாக்கி பிரச்சினை செய்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை அங்கிருந்த இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை கற்களை கொண்டு உடைத்து சேதப்படுத்தியதில், பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சிவக்குமார் உட்பட 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்