ஸ்கிம்மர், ரகசிய கேமராவைக் கண்டறிவது எப்படி?

ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தி நடைபெறும் மோசடியால் பணத்தை இழக்காமல் உஷாராக இருக்குமாறு கூறி உத்தரப்பிரதேச காவல்துறையினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வருவோரிடம் இருந்து பணத்தைப் பறிக்க கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளை அடுத்து, பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாவலர்களை பணியமர்த்துவதாக வங்கிகள் கூறின. அதற்கான செலவையும் வாடிக்கையாளரிடமிருந்தே ஏ.டி.எம் பணம் எடுக்கும் கட்டணமாக வசூலித்து வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இந்த விதியைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படும் நிலையில் கடின உழைப்பில் சம்பாதித்து, சேமித்து வங்கியில் பத்திரமாக வைத்த பணத்தையும் ஸ்கிம்மர் மோசடிகளில் மக்கள் இழப்பது அதிகரித்து வருகிறது. கார்டில் உள்ள விவரங்களை பதிவு செய்யும் ஸ்கிம்மர் கருவி, பாஸ்வேர்டைக் படம்பிடிக்கும் நுண்ணிய கேமரா உள்ளிட்டவை பொருத்தி நடைபெறும் மோசடிகளில் இருந்து தப்பிக்க அதன் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு வீடியோவை உத்தரப்பிரதேச காவல்துறை வெளியிட்டுள்ளது. மோசடி மூலம் கார்டின் விவரங்கள், பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு குளோனிங் முறையில் வேறு கார்டு தயாரித்து வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதால், மக்கள் உஷாராக இருக்க காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏ.டி.எம்., ஸ்வைப்பிங் மெஷினைப் பயன்படுத்தும் போது, ரகசிய கேமரா மூலம் பாஸ்வேர்ட் கவனிக்கப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மக்களை எச்சரித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்