லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்திலும், தங்கியுள்ள ஓட்டலிலும் வரவேற்க திரளான தமிழர்கள் வந்திருந்தனர். முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும்அவர்கள் வரவேற்றனர். லண்டனில் இரவு தங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுகிறார். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திடுகிறார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 10 ம் தேதி, சென்னை திரும்புகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்