சிசிடிவி கேமரா இருப்பதால் பல்வேறு குற்றங்கள் பாதியாக குறைவு: சென்னை பெருநகர காவல் துறை அறிக்கை

சென்னை முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படுவதால் பல்வேறு குற்றங்கள் சரிபாதி குறைந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் குற்ற சம்பவங்கள் நடந்தால் கைரேகை, நேரில் பார்த்த சாட்சி மற்றும் குற்றம் நடைப்பெற்ற விதத்தின் மூலம் குற்றவாளிகளை கண்டறிவது ஆகிய முறைகளே புலனாய்வின் போது கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் துப்பு துலங்க சில நாட்கள் தொடங்கி சில மாதங்கள் வரை கூட நீளும். ஆனால் இன்று சிசிடிவி மூலம் குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகள் சிக்கிவிடுகின்றனர். இந்த நிலையில் சிசிடிவி பொருத்தப்பட்டதால் குற்றங்கள் கடந்தாண்டை விட நடப்பாண்டில் சரிபாதி குறைந்திருப்பதாக புள்ளி விவரங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் 6 மாதத்தில் 258 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததாகவும், ஆனால் இந்தாண்டு தற்போது வரை 137 வழக்குகள் மட்டும் பதிவாகி 50 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல பொது இடங்களில் நடக்கும் தகராறு அடிதடி போன்ற குற்றங்கள் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 41 சதவீதம் குறைந்திருப்பதாகவும், கொடுங்காய வழக்குகள் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் குறைந்திருப்பதாகவும் காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, கள்ள கனவு எனும் வீடு புகுந்து திருடும் குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் 6 மாதத்தோடு ஒப்பிடும் போது 17 சதவீதம் குறைந்திருப்பதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் குற்ற சம்பவத்தை நிகழ்த்திவிட்டு குற்றவாளிகள் எந்தவொரு வழியிலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பை மீறி தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ள காவல் துறை இதன் மூலம் சென்னையை சுற்றி சிசிடிவி கேமராக்களால் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்