காஷ்மீர்’ செய்தித்தாள் கரெஸ்பாண்டண்ட் இர்பான் மாலிக் என்பவர் ஆகஸ்ட் 14ம் தேதி இரவு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலை

ஸ்ரீநகர், பிடிஐ 'கிரேட்டர் காஷ்மீர்' செய்தித்தாள் கரெஸ்பாண்டண்ட் இர்பான் மாலிக் என்பவர் ஆகஸ்ட் 14ம் தேதி இரவு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டம் த்ரால் பகுதியில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட இர்பான் மாலிக் விசாரிக்கப்பட்டு பிறகு பிணைப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுதலை செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உடனடித் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் அதிகாரிகள் தெரிவிக்கும் போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து இது போன்று பிணைப்பத்திரம் கையெழுத்திடப்பட்டு பெறப்படும் என்று தெரிவித்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்