திருநெல்வேலியில் புதிய ஆணையராக தீபக் எம் டாமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருநெல்வேலியில் நடைபெறும் ஜாதி ரீதியிலான கொலைகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தீபக் எம். டாமோர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ஆணையராக தீபக் எம் டாமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருநெல்வேலி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சாதிய மோதல்களை தடுக்கவும் ஜாதிய ரீதியாக மாணவர்கள் அணிந்து வரும் ஜாதிய கயிறுகள் அடையாளங்களை அணிவதைத் தடுக்க கல்வி நிலையங்கள் கல்வித் துறையோடு இணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாநகரில் நடைபெறும் சாதிய ரீதியிலான மோதல்களை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரில் ஏற்படும் ஜாதி ரீதியிலான கொலைகளை தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்றிருக்கும் தீபக் எம் டாமோர் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்