அவலாஞ்சியில் 4 நாளில் 258 செ.மீ., மழை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 258 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் அவலாஞ்சியில் ஏற்கனவே ஆக.,6 ம் தேதி 41.செ.மீ., ம், ஆக., 7 ம் தேதி 82 செ.மீ., ம், ஆக.,8 ம் தேதி 91 செ.மீ.,ம் மழைப்பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 45 செ.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் மட்டும் கடந்த 4 நாட்களில் 258 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 16 செ.மீ., ம், நடுவட்டத்தில் 15 செ.மீ., கூடலூரில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்த கனமழை பெய்து வருவதால் மழை அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்