அவலாஞ்சியில் 4 நாளில் 258 செ.மீ., மழை
நீலகிரி : நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 258 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் அவலாஞ்சியில் ஏற்கனவே ஆக.,6 ம் தேதி 41.செ.மீ., ம், ஆக., 7 ம் தேதி 82 செ.மீ., ம், ஆக.,8 ம் தேதி 91 செ.மீ.,ம் மழைப்பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 45 செ.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் மட்டும் கடந்த 4 நாட்களில் 258 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 16 செ.மீ., ம், நடுவட்டத்தில் 15 செ.மீ., கூடலூரில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்த கனமழை பெய்து வருவதால் மழை அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.