144 தடை உத்தரவு..!புதுச்சேரியில்

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் நடைபெறும்போது பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் நாளை தொடங்கவுள்ள சட்டசபை நிகழ்வுகளுக்கு தொந்தரவு ஏதும் வந்து விட கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவு பெறும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்