சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஓமலூர் அருகே ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு வேலை செய்துவரும் பெற்றோரை பார்ப்பதற்காக, அவர்களது 16 வயது மகள் அடிக்கடி வந்துள்ளார். இந்த நிலையில், அங்கு வேலை செய்துவந்த மோகன்ராஜ் என்பவர், அந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மோகன்ராஜை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர், பின்னர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்