மதுரையில் வாலிபர் ஓடஒட விரட்டி வெட்டிப் படுகொலை...!

சோழவந்தான் அருகேயுள்ள ஊத்துக்குழியைச் சேர்ந்த பாபு, விரட்டிபத்து பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற அவரை, 6 பேர் கொண்ட கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தது. இதனைக்கண்டு தப்பியோடிய பாபுவை, அந்த கும்பல் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், பாபுவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்