காவல் நிலையம் முன்பு டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காவல் நிலையம் முன்பு நின்று டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மங்கலம் காலனி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்காக அனுமதி கேட்டு, கடந்த 28ஆம் தேதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் காவல் நிலையத்தின் முன்பு நின்றுக் கொண்டு, தங்கள் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளது என்ற பாடல் வரிகள் கொண்ட, டிக்டாக் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அதில் தோன்றும் சூர்யா, காமேஷ், அரவிந்த், சூர்யா ஆகிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்