மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு மாணவர் கட் ஆப் மதிப்பெண்

மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் விவரங்களை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, செப்டம்பர் 3ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்நிலையில், எல்.எல்.பி சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரத்தை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுப்பிரிவினருக்கு 76 புள்ளி 782 ஆகவும், பி.சி பிரிவினருக்கு 70ஆகவும், எஸ்.சி , எஸ்.டி பிரிவினருக்கு 60ல் இருந்து 69 வரையிலும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்