தாய் கீதாவின் உயிர்காக்க உதவுங்கள்....

கோவை: தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் நடுத்தர குடும்ப வர்க்கத்தை சேர்ந்த சிலம்பரசன்(34). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா(30). கடவுளின் அருளால் கடந்த மாதம் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தைகள் நன்றாக உள்ளனர். ஆனால், இந்த மகிழ்ச்சியை இந்த தம்பதியரால் வெளிப்படுத்த முடியவில்லை.பிரசவத்தின் போது கீதாவிற்கு அதிகப்படியான ரத்தம், கிட்டத்தட்ட 800மில்லி அளவுக்கு வெளியேறியதால் ஆபத்தான நிலையில் உள்ளார். உயர் சிகிச்சைக்காக தற்போது கீதா, கோவையில் உள்ள ‛ராயல் கேர்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியை காப்பாற்ற சிலம்பரசன், தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் பணம் பெற்று சுமார் ரூ.13 லட்சம் வரை இதுவரை செலவு செய்துள்ளார். ஆனாலும் கீதாவின் உடல்நிலை மோசமாக உள்ளது.கீதாவின் உயிரை காப்பாற்ற மேலும் பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் சிலம்பரசன், கீதாவை காப்பாற்ற உதவியை நாடியிருக்கிறார். நல்ல மனம் படைத்தவர்கள் பண உதவி செய்யுங்கள். கீதாவின் உடல்நலம் குறித்து கோவை, ராயல் கேர் மருத்துவமனை அளித்த சான்று இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கீதாவிற்கு உதவ விரும்புவர்கள் கீழ்காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். Bank Name: Yes Bank Account number: 2223330061038154 Account name: simbu IFSC code: YESB0CMSNOC நன்கொடை தர விரும்புவோர்.... https://www.edudharma.com/fundraiser/savegeetha என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்