வைகையில் தேக்கி வைக்கப்படும் சாக்கடை நீர் பொதுமக்கள் அவதி

வைகை நதியின் குறுக்கே கடந்த சில மாதங்களாக தடுப்பணைகள் போன்று கட்டப்பட்டு வருகிறது.இந்த வேலைப்பாடுகளுக்காக மழை பெய்த நீரை தேக்கி வைத்துள்ளனர். இதற்கிடையில் செல்லூரிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீரும் ஆற்றில் கலக்கிறது. எத்தனை அரசுகள் வந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது நடந்துகொண்டு தான் இருக்கிறது.தற்போது சாக்கடை நீரானது போக வழி இல்லாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அருகில் கரையோரம் உள்ள மக்கள் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றத்தால் மிகுந்த அவதி படுகின்றனர். இதனை சரி செய்ய மதுரை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் இத்தனை காலங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே ஆற்றில் கலக்கிறது. இவை அனைத்தும் மாநகராட்சிக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்