கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே வீட்டில் கள்ள துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரப்பன்வலசையை சேர்ந்த வள்ளி என்ற பெண் வீட்டில் கள்ள துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் அதனுடையே தோட்டாக்கள் சிக்கின. தகவலறிந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வள்ளியை கைது செய்தனர். அவர் இலங்கை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்காக துப்பாக்கியை வைத்திருந்ததும், ஏராளமானோர் வள்ளியிடம் துப்பாக்கியை வாங்கி சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள துப்பாக்கி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என அப்பகுதியினரை வள்ளி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையை சேர்ந்த வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என உளவுத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்