நட்சத்திர ஓட்டல் உணவில் புழுக்கள் - மீரா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரும், நடிகையுமான மீரா சோப்ரா, ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள டபுள் ட்ரீ எனும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு தான் உணவருந்தச் சென்றதாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். உணவில் புழுக்கள் நெளிந்தபடி இருந்ததால், தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள அவர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்