தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளுமாறு போலீசார் அனைவருக்கும் டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்
சோதனை மேற்கொள்ளுமாறு போலீசார் அனைவருக்கும் டி.ஜி.பி., திரிபாதி திரிபாதி சிறப்பு வாகன சோதனை: டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு சென்னை : தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளுமாறு போலீசார் அனைவருக்கும் டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.விபத்துக்கள், உயிரிழப்புக்களை தடுக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவர் ஆணை பிறப்பித்துள்ளார். ஒரு வழிப்பாதையில் விதி மீறி செல்வோர் மீதும், வலது பக்கம் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகள், விபத்துகள் அதிகம் நிகழக் கூடிய இடங்களில் சோதனையில் ஈடுபடவும், தலைக்கவசம் இன்றி செல்வோர், சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள், மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், விதிமீறும் மொபைல் செயலிகள் மூலம் உணவு வழங்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடஎடுக்கவும்டி.ஜி.பி., திரிபாதி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.