தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.12ம் வகுப்பு படித்து வரும் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவன் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 10ம் வகுப்பு மாணவனும், அவனது நண்பர்களும் 12ம் வகுப்பு மாணவனைத் தாக்கினர்.தடுக்க முயன்ற அவனது நண்பர்களையும் கத்தியால் குத்தி விட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த 12ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முல்லைவேந்தனையும் அவர் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.ரஷ்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.சைபீரியாவில் உள்ள துலுன் மற்றும் இர்குட்ஸ்க் (Tulun and Irkutsk) ஆகிய ழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் மாயமாகி உள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 300 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய அதிபர் புதின் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.