வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் தேர்வுத்தளம் அமைக்கப்படும்
சட்டசபையில் அவர் அறிவித்துள்ளதாவது: திருவள்ளூர், பூவிருந்தமல்லி . மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் 43.22 கோடியில் புதிய கட்டம் கட்டப்படும். அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ரூ. 2 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கொடைக்கானலில் ரூ. 20 கோடியில் கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும். போக்குவரத்து கழகங்களில் பொது பயண அட்டை வழங்கப்படும். போக்குவரத்து கழக 25 பஸ்களில் ரூ. 61.25 கோடியில் மின்சார சக்கர நாற்காலி வசதி செய்யப்படும். வாகன பராமரிப்பு இயக்குனரக செயல்பாடுகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் எனக்கூறியுள்ளார்