புதுவை அமைச்சரவை கூட்டம் சட்டசபையில் உள்ள கேபினெட் அறையில் இன்று நடந்தது
புதுவை அமைச்சரவை கூட்டம் சட்டசபையில் உள்ள கேபினெட் அறையில் இன்று நடந்தது. முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், அரசு செயலர்கள் அன்பரசு, ஆலிஸ்வாஸ், பாண்டா, சரண், கந்தவேலு, அசோக்குமார், ஜவகர் மற்றும் துறை இயக்குனர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், புதுவை அரசின் வருவாயை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கலால்துறையில் வரியை உயர்த்துவது குறித்து ஆலோசி க்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் தடை செய்வது குறித்தும், சூரிய ஒளி மின் திட்டம், நீல புரட்சி, கிராமப்புற மேம்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.