மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை வழியாக சென்னையை சுற்றி வரும் வகையிலான திட்டம் உருவாக்கப்பட்டு, அதில் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் நீள ரயில் பாதை, நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் சுமார் 10 ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. தற்போது நீதிமன்ற வழக்கும் முடிந்துவிட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடப் பணிகளை துரிதப்படுத்தும்படி அந்த மனுவில், 'இந்த தடத்தில் பணிகள் நிறைவடைந்தால் தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரயில் தடங்களுடன் இணைப்பு ஏற்படும் என்றும் தனி நபர் வாகன பயன்பாடு குறைந்து கரியமிலம் வெளியாவதும் குறையும்' என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்