இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன பரிதாப சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.வலியுடன் காதல் என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள ஆர்.எஸ்.கோபால் என்பவர் தான் சினிமாவிற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி நிஜத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரில் இடம் பெற்ற பரிதாபத்துக்குரியவர்..!தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஆர்.எஸ். கோபால், நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வந்த கோபால், படத்தில் இறந்து போவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தார்.சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய விடியோவையும், படத்திற்காக ஒட்டப்பட்ட தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்தார்.அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் ல், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாக கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர். அங்கு வாசலில் கெத்தாக அமர்ந்திருந்த கோபால், தன்னுடைய புதிய படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்று நண்பர்களிடம் விளக்கம் அளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர். ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர். சினிமாவிற்காக அச்சடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி சினிமாவில் பிரபலமாக நினைத்தவர் அடுத்த சில நாட்களிலேயே நிஜத்தில் இறந்து போனது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ள து..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)