செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், பிரதம மந்திரியின் சம்மன் நதி யோஜனா திட்டத்தில், 520 விவசாயிகள், நேற்று, மனு அளித்தனர்.

செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், பிரதம மந்திரியின் சம்மன் நதி யோஜனா திட்டத்தில், 520 விவசாயிகள், நேற்று, மனு அளித்தனர். செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், பிரதம மந்திரியின் சம்மன் நிதி யோஜனா திட்த்திடன் கீழ், பயன்பெறாத சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளுக்கு, கிராம நிர்வாக அலுவலகத்தில், சிறப்பு முகாம், நேற்று, நடைபெற்றது.இந்த முகாமை, வருவாய் கோட்டாட்சியர் செல்வம், ஆய்வு செய்தார்.இந்த முகாமில், செங்கல்பட்டு தாலுகாவில், 61, திருக்கழுக்குன்றம், 293, திருப்போரூர் தாலுகாவில், 166 மனுக்கள் என, 520 மனுக்கள் விவசாயிகள் அளித்தனர்.இந்த மனுக்களை பரிசீலனை செய்து, திட்டத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.இன்று, மேற்கண்ட உள்ள, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று, மனுக்கள் அளிக்கலாம் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)