தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம்

டெல்லி : தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நியாயமில்லை என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நடத்தினர். மேலும் லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் பணி அரசு பணி என கருத முடியாது என தமிழக அரசு வாதம் நடத்தியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்