அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்ப்பு

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது.   ஆனால் சிலநாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, இனி பயோமெட்ரிக் கருவிகளில் இந்தி இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருமொழிகளும் மாற்றப்பட்ட நிலையில் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகள் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்