சி.சி.டி.வி முன்பு நின்று வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பீர்களா? காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருசக்கர வாகனங்களில் பின் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், போக்குவரத்து காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா முன் நின்று விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பார்களா என கேள்வி எழுப்பினர். மேலும், ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கை, விதிகளை மீறும் வாகன ஒட்டிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள சாலைகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அண்ணா சாலையில் கத்திபாரா முதல் மன்ட்ரோ சிலை வரை , காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்றவற்றில் கடந்த 2-ம் தேதி பதிவான கண்காணிப்பு கேமரா பதிவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை12-ம் தேதிக்கு தள்ளிவைந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)