நீங்கள் கடவுள் இல்லை; வெறும் உள்துறை அமைச்சர்தான் : பதிலடி கொடுத்த ஒவைசி - ஆடிப்போன அமித்ஷா

பயந்து நடுங்குவதற்கு அமித்ஷா ஒன்றும் கடவுள் இல்லை என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜூலை 15ம் தேதியன்று தேசியப் புலனாய்வு முகமை(NIA) திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருகும் திருத்தங்கள், மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.இந்நிலையில், இந்த மசோதாவின் மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.முன்னதாக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குறித்து அசாதுதீன் ஒவைசி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தற்போது என்.ஐ.ஏ-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா கொண்டுவருவதன் அவசியம் என்ன, மேலும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு தற்போது என்ன தேவை ஏற்பட்டுள்ளது” என கேள்வியெழுப்பினார்.மேலும், “ அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டு இந்தியாவை பார்க்கக்கூடாது, இந்தியாவின் நிலை என்பது வேறானது” என அவர் குறிப்பிட்டார். பயந்து நடுங்க நீங்கள் கடவுள் இல்லை; வெறும் உள்துறை அமைச்சர்தான் : பதிலடி கொடுத்த ஒவைசி - ஆடிப்போன அமித்ஷா பயந்து நடுங்குவதற்கு அமித்ஷா ஒன்றும் கடவுள் இல்லை என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி. சத்யபால் சிங், “ சில தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் போது ஹைதரபாத் காவல்துறை ஆணையரை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அம்மாநில அரசு வற்புறுத்துகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் சில தனிப்பட்ட அதிகாரிகளை கணக்கில்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!